2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தம்வசம் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கல்முனை, மாளிகைக்காடு பௌசுல் வீதியைச் சேர்ந்த எம்.ஐ. அப்துல்மஜித் (வயது 50 ) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .