2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடலில் மூழ்கி இருவர் பலி

Thipaan   / 2016 மார்ச் 05 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, பொத்துவில் கொட்டுக்கல் கடலிலுக்கு வெள்ளிக்கிழமை (04) மாலை குளிக்கச் சென்று காணாமற்போன இரு இளைஞர்களின் சடலங்கள், இன்று சனிக்கிழமை (05) காலை 07.30 மணியளவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இப்றாலெப்பை முஹம்மது பஹத் (17 வயது), றஹுமான் ராகூத் (19 வயது) ஆகிய இருவரே உயிரிழந்தவர்களாவர்.

சுற்றுலா நிமித்தம் வந்த இவர்கள், கொட்டுக்கல் கடலில் நீராடிய வேளையிலேயே காணாமல் போயிருந்தனர்.

சடலங்கள் பொத்துவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .