2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்முனை மாநகரசபையின் வரவு –செலவுத்திட்டத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி;

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

2017ஆம் ஆண்டுக்கான கல்முனை மாநகரசபையின் வரவு -செலவுத்திட்ட நகல் பிரதிகளை பொதுமக்கள் பார்வையிட முடியும் என அம்மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இன்று (22) முதல் எதிர்வரும் 28ஆம் திகதிவரை அலுவலக நேரங்களில் மாநகரசபையின் நிதிப் பிரிவில் இந்த வரவு- செலவுத் திட்ட நகல் பிரதிகளைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த வரவு -செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க விரும்புவோர் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை எழுத்து மூலமாகச்  சமர்ப்பிக்க முடியும்  எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .