2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

100 மதுபானப் போத்தல்களுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 21 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, சாகாமம் வீதியில் 100 மதுபானப் போத்தல்களை சட்டவிரோதமாகக் கொண்டு சென்ற இருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்ததாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.  

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்துக்கும் பாலமுனை - திராய்க்கேணி பிரதேசத்துக்கும் கொண்டு செல்லும் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
இவர்களிடம் இருந்து தலா 50 போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேகநபர்கள் இருவரையும், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (21) ஆஜர்படுத்தவுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .