2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Kogilavani   / 2016 மார்ச் 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதி  ஒலுவில் சந்தியில் இன்று(23) புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி  வந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான கெப் வண்டி வீதியில் மோட்டார் சைக்கில் மற்றும் துவிச்சக்கர வண்டி ஆகியவற்றில் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .