2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்முனையில் போதைப்பொருள், புகைத்தல் தவிர்ப்பு வேலைத் திட்டங்கள்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

இளைஞர்களுக்காக கல்முனை பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தவிர்ப்பு விசேட வேலைத் திட்டங்கள் கிராமமட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர்களை மையமாகக்கொண்டு சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் கிராமமட்டத்தில் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் போன்றவற்றிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்கான தொடர் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக இளைஞர்கள் விழிப்பூட்டப்பட்டுள்ளதுடன், கிராமமட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு களத்தில் பணிபுரிய ஆரம்பித்துள்ளனர்.

கல்முனை பிரதேசத்திலுள்ள மருதமுனை, கல்முனைக்குடி கிராமங்களில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .