2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் விபத்து; அரச உத்தியோகத்தர் பலி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரவணன், சக்திவேல்)

அம்பாறை பாலிகா வித்தியாலத்திற்கு முன்னாலுள்ள வீதி சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் கான்டர் வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காரைதீவு மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கணக்காய்வாளர் வ.சிவேஸ்வரன் (வயது 51) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் கணக்காய்வாளராக கடமையாற்றும் இவர் தனது கடமை நிமிர்த்தம் சென்றபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவரின் சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .