2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கோழி வளர்ப்பில் அதிக அக்கறை செலுத்தும் மலையடிகிராம மக்கள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  மலையடிகிராம மக்கள் கோழி வளர்ப்பில் அதிகம் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளனர். இப்பிரதேசத்தில் கோழி முட்டைக்கு கேள்வி அதிகரித்துள்ள அதேவேளை, கடந்த காலங்களை விட சந்தைகளில் கூடிய விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறை மக்கள் வங்கி கிளையினூடாக சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதி செய்யப்பட்டுள்ளதால், கோழி வளர்ப்பில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தமது ஜீவனோபாயத்தை ஓரளவு கொண்டு செல்லக்கூடியதாகவுள்ளதாக கோழி வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X