2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஷஜன செவன வீடமைப்பு கடனுதவி

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சி.அன்சார்)

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு "ஷஜன செவன" வீடமைப்பு கடனுதவி வழங்கும் மற்றும் காணி உறுதி பத்திரம் வழங்கும் வைபவம் அம்பாறை நகர மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, விசேட அதிதிகளாக அரச வளங்கள்,தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் பீ.தயாரத்ன, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் வீடமைப்புக்கென காசோலைகள், இதுவரையும் காணி உறுதி பத்திரம் வழங்காதவர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் அமைச்சர் விமல் வீரவன்சவினால் வழங்கி வைக்கப்பட்டது.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .