2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து 5 வைத்தியர்கள் வெளியேறினர்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து நான்கு பெரும்பான்மையின வைத்தியர்கள் உட்பட ஐந்து வைத்தியர்கள் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஒருவரின் மனைவி, தமக்கு விடுத்த அச்சுறுத்தலின் பேரிலேயே தாம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் செல்வதாக குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெரும்பான்மை இன டாக்டர் கிரிசாந்த தெரிவித்தார்.

வெளியேறிச் செல்லும் நான்கு வைத்தியர்களும் நாளை சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர், அமைச்சின் இணைப்பாளர் ஆகியோரை சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களான கிரிசாந்த, துல்மினி, நிமிர, மற்றும் அசோக்குமார் ஆகிய வைத்தியர்களே வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .