2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய நூலக மாடிக்கட்டிட திறப்பு விழா

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை கல்வி, கலாசார மேம்பாட்டு ஸ்தாபனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலக மாடிக்கட்டிட திறப்பு விழாவும் அமைப்பின் ஏழாவது ஆண்டு நிறைவு விழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப.4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அமைப்பின் தலைவர் எம்.பி.எம். மாஹிர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நெதர்லாந்து கல்முனை சமூக நண்பர்கள் அமைப்பின் தலைவரான கீஸ் லெங்வேல்ட், கௌரவ அதிதியாக புள்ளி விபரவியலாளரும், நெதர்லாந்திலுள்ள தொழிநுட்ப மன்றத்தின் தலைவருமான ஏ.எ.எம்.அப்துல் கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலக கட்டிடமானது ஆறு வருடங்களாக கல்முனை பிரதேசத்தில் நிலவி வரும்  நூலகமில்ல் பிரச்சினையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

 


You May Also Like

  Comments - 0

  • sage Saturday, 06 November 2010 04:13 AM

    நல்லதொரு முயற்சி, உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகிறோம் ...

    Reply : 0       0

    MI Rifan Saturday, 06 November 2010 09:01 PM

    கல்வி கலாசார மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .