2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வு

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் க.பொ.த.உயர்தர வர்த்தக பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வு இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் கலாநிதி எம்.எல்.ஏ.காதர் கலந்து   பரீட்சைக்கு தோற்றிய பின்னரும் சித்தியடைந்த பின்னரும் மாணவர்கள் தமது கல்வித் துறையினை சிறந்த முறையில் தெரிவு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வு சாய்ந்தமருது கொம்டெக் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .