2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நிதி ஒதுக்கீடு

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

வறிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்களை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.உவைஸ் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்த தையல் இயந்திரங்களை பைசால் காசிம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் 04ஆம் பிரிவு மையாவாடி கட்டிட நிர்மாணத்துக்கு 50 ஆயிரம் ரூபாவினையும், அல்-ஜன்னா பள்ளிவாசல் நிர்மாண பணிகளுக்கு 90 ஆயிரம் ரூபாவினையும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X