2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நேர்முக பரீட்சை

Super User   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்களை தெரிவு செய்யும் நேர்முக பரீட்சை இன்று புதன்கிழமை பிற்பகல் கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நீதி அமைச்சின் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் பிரதிநிதி டி.கே.கே. பெரேரா, தொழில் நியாய சபையின் உதவிச் செயலாளர் தீபானி சேனரத்ன, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.பி.அபுல்ஹசன் ஆகியோரினால் நேர்முக பரீட்சை நடத்தபட்டது.

இந்த நேர்முகப் பரீட்சையில் மத்தியஸ்த சபை அங்கத்துவத்திற்காக விண்ணப்பித்த சுமார் 90 விண்ணப்பதாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .