2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

Super User   / 2011 ஜனவரி 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

அமைச்சர் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளையும் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்டுள்ள அணைக்கட்டுகளையும் குளங்களையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அமைச்சருடன், சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .