2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு நிவாரணம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 17 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனையில் இடம்பெற்றது.

மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பத்திரிகையாளரும், மூன்றாவது மனிதன் பதிப்பாசிரியருமான எம்.பௌசர் மற்றும் சில எழுத்தாளர்களின் நிதியுதவியுடன் மேற்படி நிவாரணம் வழங்கப்பட்டது.

மருதமுனைப் பிரதேசத்தில் 03 ஆயிரத்து 423 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 525 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்பரி நிலையங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .