2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றல்  நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை ஐந்து பாடசாலைகளில் இடம்பெற்றது.

வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம், சொரிக்கல்முனை அல்-தாஜுன் வித்தியாலயம், சவலக்கடை அல்-ஹிக்மா முஸ்லிம் வித்தியாலயம், மத்திய முகாம் அல்-ஹிரா வித்தியாலயம், மத்திய முகாம் ஜி.எம்.எம்.வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது.

அக்கரை பவுன்டேசனின் நிதியுதவியுடனான கற்றல் உபகரணங்கள் வழங்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அக்கரை பவுன்டேசன் அமைப்பின் தலைவருமான சட்டத்தரணி எம்.எல். துல்கர் நயீம் மற்றும் சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ.மன்சூர் உட்பட பலர் கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .