2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன், ஆர்.அனுருத்தன்)

அம்பாறை, கஞ்சிக்குடியாற்றுப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  250 துப்பாக்கி ரவைகளை நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நிலத்தில் பாதுகாப்பான முறையில் மறைத்த வைக்கப்பட்டிருந்த 250 எல்.எம்.ஜி.ரக துப்பாக்கி ரவைகளை  விசேட பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .