2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு

Super User   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் கல்முனை பொலிஸாரும் இணைந்து கல்முனை கடற்கரை பிரதேசத்தில் டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கையில் இன்று செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

இதன்போது, வீடுகள், வெற்று வளவுகள்  மற்றும் மீன் வாடிகளிலுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், கிராமசேவை  உத்தியோஸ்தர்கள், சமுர்த்தி மேம்பாட்டு உத்தியோஸ்தர்கள் என பலர் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கல்முனை பிரதேச கடற்கரை ஓரங்களில்  அண்மை காலமாக பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதனால் டெங்கு நோய் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • majeed Wednesday, 14 September 2011 04:40 PM

    PHI மார் uniform அணிந்து வேலை செய்வதை பர்ர்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .