2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுயதொழில் முயற்சிக்கான நுண்கடன் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
நெகோட் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை புளக் ஜே மேற்கு 2ம் பிரிவு மாதர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுக்கு சுயதொழில் முயற்சிக்கான நுண்கடன் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை இஸ்மாயீல் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவி எம்.எல்.ஹபீலா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் சம்மாந்துறை அனைத்து பள்ளிவாசல்கள் பரிபாலனசபை தலைவரும் கெப்சோ அமைப்பின் பணிப்பாளருமான ஐ.ஏ.ஜப்பார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.சரீப் முஹம்மட், கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அறபாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .