2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் வீதிகள் சீரமைப்பு

Super User   / 2011 நவம்பர் 22 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்படும் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் வீதிகளைச் சீரமைப்பதோடு, நீர் வடிந்தோடுவதற்கான ஏதுநிலைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் இன்று செவ்வாய்கிழமை - பிரதேசம் முழுவதும் மேற்கொண்டனர்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ள வீதிகளில் மண்ணிட்டு நிரப்புதல், வெள்ள நீர் வடிந்தோடும் வகையில் வீதிகளை சமப்படுத்துதல் போன்ற நடவடிக்கைள் இதன்போது இடம்பெற்றன.

பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று இடம்பெற்ற வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று கண்காணித்தனர்.

கடந்த வெள்ளத்தின் போது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இனங்கண்டு, அப்பகுதிகளிலுள்ள வீதிகளை வெள்ள நீர் வடிந்தோடும் வகையில் சீரமைத்து வருவதாகவும் தவிசாளர் நசீர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • wahabfais Wednesday, 23 November 2011 05:38 AM

    அட்டாளைச்சேனை.

    Reply : 0       0

    ummpa Wednesday, 23 November 2011 02:19 PM

    இங்குதான் தப்பு பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள் . முதல் ஏற்கனவே இருந்தவீதி மட்டதுக்குதான் வீதி அமைக்கவேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் வீதிக்குமேல் வீதி அமைத்தால் வீடுகள் தண்ணீரில் அமிழ்ந்துவிடும் . வீதி அமைக்க திட்டமிடலை பண்ணுங்க. அகழ்ந்து எடுத்த மண்ணை விற்கமுடியும் அந்தப்பணத்தில் மற்ற வீதியும் அமைக்கமுடியும்.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 23 November 2011 11:08 PM

    ummpa நீர் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்? உடனே போய் உரியவரிடம் சொல்லுப்பா சும்மா லூவன்னா மாதரி பேசிட்டு இருப்பதால் எதுவும் ஆகாது.
    நடப்பது மக்களுக்கான சேவையும் தேவையும்தான் ...

    Reply : 0       0

    UMMPA Thursday, 24 November 2011 02:06 PM

    Siraj , தம்பி உங்கட அறிவுக்கு சபாஸ். அவங்களுகிட்ட சொல்லுவதக்குதான் இந்த பகுதி. நான் என்ன சொல்லுகிறேன் என்பதே கொஞ்சம் திரும்ப வாசிங்கோ ! வீதி அமைக்கலாம் ஆனால் அதை அமைக்கும்போது walawu பள்ளம் ஆகிவிடும் அதனால் தான் சொல்லுகிறேன் unkalin ariwukku weethi amaikkamal weethi athikarasafiedam ENTHIRIKAL ULLARKAL, AWARKALIN UTHAWI UNKALUKKU UTHAWIYAKAERUKKUM.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .