2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய அதிபராக ஜனூர்டீன் இன்று பதிவிகளைப் பொறுப்பேற்றார். இளைஞர் விவகார திறனபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் உத்தரவுக்கமைய தொழில்நுட்பக் கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திரலால் அம்பேவத்த இனால் இந் நியமனம் வழங்கப்பட்டது.

இலங்கை தொழில்நுட்பக் கல்விச் சேவையின் 3ஆம் தர அதிகாரியான இவர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பல வருடங்கள் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றினார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்  அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் நியமனத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்டது. கடந்த 10 மாதங்களாக இயங்காமல் இருந்த தொழில்நுட்பக் கல்லூரி இன்று புதிய அதிபர் நியமனத்துடன் திறக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கல்விச் சேவையில் இல்லாத ஒருவர் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய நிலையில், தொழில்நுட்பக் கல்விச் சேவையை சேர்ந்த ஹசன் அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன் பின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்டது.

அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கிடையில் கடந்த வாரம் அமைச்சில் இடம்பெற்ற நல்லிணக்க பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை தொழில்நுட்பக் கல்வி சேவையின் அதிகாரியான ஜனூர்டீனை அதிபராக நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டு இன்று கடமையை பொறுப்பேற்றார். அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்ட நிலையில் அதில் கடமைபுரிந்த உத்தியோகத்தர்கள் அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாக கடமை புரிந்து வந்தனர்.

கல்லூரி திறக்கப்பட்டமையால் உத்தியோகத்தர்களும் அக்கரைப்பற்றுக்கு இடமாற்றப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • mansoor a.cader Thursday, 15 November 2012 09:15 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    rima Thursday, 15 November 2012 03:32 PM

    எல்லாமே அரசியல்வாதியின் சதிதான் என்ன செய்வது யாரிடம் போய் சொல்வது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .