2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'ரசித்து மகிழ்வோம்' கண்காட்சி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 'ரசித்து மகிழ்வோம்' என்னும் தொனிப்பொருளில் கற்றல், கற்பித்தல் தொடர்பான கண்காட்சி நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூரின் ஆலோசனையின் கீழ் பாடசாலை ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் முதன்மை நிலை – 01 மாணவர்களின் சுய ஆக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வைபவத்தில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் மௌலவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

இந்த வைபவத்தில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் றிஷ்வி யஹ்ஷர், ஆசிரிய ஆலோசகர்களான யு.எல். நியாஸ் (மௌலவி), எஸ்.எல்.மன்சூர், எம்.ஏ.அபூதாஹிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்காட்சியினைப் பார்வையிடுவதற்காக அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள், முன்பள்ளி பாடசாலை சிறார்கள், பெற்றோர்கள் மற்றம் பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.



You May Also Like

  Comments - 0

  • ameen Saturday, 17 November 2012 05:00 PM

    நல்ல ஏற்பாடு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X