2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குண்டுகள் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 18 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்ட கிளைமோர் குண்டு மற்றும் கைக்குண்டுகள் ஆகியன நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தலைமையக குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விடுதலை புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்த கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இந்த விசாரணைகளின் போது விநாயகபுரம் பிரதான வீதியில்  உள்ள மற்றுமொரு விடுதலைப் புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்றவர் வீட்டில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ நிறை கொண்ட கிளைமோர் குண்டு ஒன்றும் கைக்குண்டுகள் இரண்டும் குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்

இந்த சம்பவத்தையடுத்து விடுதலைப் புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த  விநாயகபுரத்தைச் சேர்ந்த நான்கு பேரை குற்றப் புலனாய்வு பிரிவினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X