2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொழிற் பயிற்சிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் ஆரம்பம்

Kanagaraj   / 2013 ஜனவரி 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான கற்கை நடவடிக்கைகள் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் பயிலுனர் சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தற்போது நடைபெறுகின்றன.

நேர்முகத் தேர்வுகள் 15ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதால், பயிற்சிநெறிகளுக்கென ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்க தவறியவர்களும் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தம்மை பதிவுசெய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நிந்தவூரிலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி வளாகத்தில் இன்று புதன்கிழமை முதல் நேர்முகப்பரீட்சை இடம்பெற்று வருகின்ற அதேவேளை, சம்மாந்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜனவரி 3,4ஆம் திகதிகளில் ஆட்சேர்ப்பு பணிகளில் இடம்பெறவுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 42 கற்கைநெறிகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 15 தொழிற்பயிற்சி பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 59 பயிற்சிநெறிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .