2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் கடும் மழை

Super User   / 2013 ஜனவரி 03 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று புதன்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதேவேளை, நேற்று இரவு பெய்த கடும் மழையினால் மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் தேங்க ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை முதல் தற்போது வரை கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதோடு இருண்ட, குளிருடனான காலநிலையும் நிலவுகின்றது.

இன்றைய தினம் சூரியனுக்கு அண்மையில் புவி நகர்ந்துள்ளமையால் அதிக வெப்பத்தினை உணர முடியும் என்று வானிலை நிபுணர்கள் அறிவித்திருந்த நிலையிலேயே - அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் குளிருடனான காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .