2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிராந்திய ஊடகவியலாளரின் வீட்டில் தாக்குதல்

Super User   / 2013 ஜூலை 26 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன், ரீ.கே.ரஹ்மதுல்லாஹ்


அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளரொவருரின் வீடு இனந்தெரியாதேரினால் நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இதனால், வீட்டின் யன்னல் கதவுகள் சேதமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அட்டாளைச்சேனை 16ஆம் பிரிவு கிழக்கு வீதிஇ தைக்கா நகரைச் சேர்ந்த எப்.எம் முர்தளா என்ற பிராந்திய ஊடகவியலாளரின் வீடே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

ஊடகமொன்றில் வெளியான செய்தியினை அடுத்தே இவரின் வீடு தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .