2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தென் கிழக்கு பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Super User   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எம்.வை.அமீர்

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2ஆம் கல்வியாண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின்  கலை, வர்த்தக முகாமைத்துவம், அரபு மொழியும் இஸ்லாமிய கற்கை மற்றும் பொறியியல் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளே நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

விடுதி வசதி பெற்றுள்ள மாணவர்கள் எதிர்வரும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு மாணவர்கள் சமூகம் தர வேண்டும் என  பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 2ஆம் வருட கல்வி ஆண்டு  ஆரம்ப திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .