2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'தகவல் திரட்டும் படிவத்தை யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல் மக்கள் திண்டாட்டம்'

Thipaan   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான், அலியார் தாஜகான்

பொத்துவில் உப மின்நிலைய மின் பாவனையாளர்களுக்கு, இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தால், வாடிக்கையாளர் தகவல் திரட்டும் படிவம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

அப்படிவத்தைப் பூரணப்படுத்தி யாரிடம் ஒப்படைப்பதென  தெரியாது தாம்  திண்டாடுவதாக, பொத்துவில் உப மின் நிலைய மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சேவையின் தரத்தை உயர்த்துதல், பராமரிப்பின் பொருட்டு மின் துண்டிப்பு, மின் கட்டணம் செலுத்தப்படாமைக்கான மின் துண்டிப்பு மற்றும் அத்தியாவசியத் தகவல்களை உடனுக்குடன் தருவதற்காக இத்தகவல்கள் திரட்டப்படுவதாக அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணக்கு மற்றும் வளாக இலக்கம், போக்குவரத்து அமைப்பு, முதலெழுத்துடன் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், நிலையான மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கம், மின் அஞ்சல் முகவரி முதலான விவரங்கள் அப்படிவத்தில் கோரப்பட்டுள்ளது.

இப்படிவத்தைப் பூர்த்தி செய்து, எங்களது மின்மானி வாசிப்பாளரிடம் ஒப்படைக் குமாறு அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்மானி வாசிப்பாளரோ கொச்சைத் தமிழில் உப மின் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறி அப்படிவங்களை மின் பாவனையாளர்களிடம் கொடுத்துச் செல்கிறார்.

அல்லது அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தின் தபால் முகவரிக்கோ, மின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படிவத்தை, மின்மானி வாசிப்பாளரிடமா, உப மின் நிலையத்திலா, பிரதேச மின் பொறியியலாளர் காரியாலய முகவரிக்கா அனுப்புவதென்று தெரியாது திண்டாடுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .