2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சட்ட விரோதமாக சாராயம் வைத்திருந்தவருக்கு 10,000 ரூபாய் அபராதம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தில் சட்ட விரோதமாக சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதின்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வியாழக்கிழமை (05) தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸார் புதன்கிழமை (04) மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் நேற்று (05) ஆஜர் செய்த போதே நீதவான் மேற்படி 10 ஆயிரம் ரூபாய் அபராத்தை விதித்தார்.

மேலும், பாலமுனை பிரதேசத்தில் கஞ்ஞா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X