2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு அபராதம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில்கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் ரூபாய் 7,500 அபராதமாக விதித்து திங்கட்கிழமை(9) தீர்ப்பளித்தார்.


மேற்படி நபர், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்  போது ஞாயிற்றுக்கிழமை (08) கைதுசெய்யப்பட்டிருந்தார்.


குறித்த நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் திங்கட்கிழமை(9) ஆஜர் செய்த போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட சிகரட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .