2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அபிவிருத்தி செயற்குழுவை சந்தித்தார்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மருதமுனை, வைத்தியசாலை அபிவிருத்திச் செயற்குழுவுக்கும் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுடீன் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருக்குமான சந்திப்பு மருதமுனை வைத்தியசாலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றது.

மருதமுனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஃளார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் உயர்மட்டக்குழுவினரிடம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது குழுவினர், வைத்தியசாலையின் தேவையினை பார்வையிட்டதுடன் வைத்திய உபகரணங்கள் சிலவற்றையும் அன்பளிப்புச் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .