2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தடைசெய்யப்பட்ட சிகரெட்டை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு அபராதம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

 
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனையில், தடைசெய்யப்பட்ட சிகரெட்டை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் 1500 ரூபாய் அபராதம் விதித்து புதன்கிழமை(11) தீர்ப்பளித்தார்.


மேற்படி நபர், சிகரெட்டை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை(10) அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.


இந்நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும், மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் புதன்கிழமை(11) ஆஜர்செய்தபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .