2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீதியில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூலை 27 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வீதியில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  நபருக்கு 2,000 ரூபாய் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று திங்கட்கிழமை (27) அபராதம் விதித்துள்ளார்.

குறித்த நபரை கடந்த 15ஆம் திகதி கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார், இவர் மீது வழக்குத் தொடுத்திருந்தனர். 

இவ்வழக்கு விசாரணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X