2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பிரதான வீதியில் அனுமதியின்றி முச்சக்கர வண்டி ஒன்றில் ஒலிபெருக்கியை பொருத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மூவரை கடந்த வியாழக்கிழமை(30) மாலை அக்கறைப்பற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து, பிரசார நடவடிக்கையில் மேற்படி மூவரும் ஈடுபட்டு;ளளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்படுவதாக தேர்தல் அலுவலகத்தினாரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலே அக்கரைப்பற்று பொலிஸார் மேற்படி மூவரையம் கைதுசெய்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .