2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுவன் படுகாயம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று (11) மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்,  படுகாயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவனை மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பாக அக்கரைப்ற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .