2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிரேஷ்ட அதிகாரிகள் காலை 8.30 மணிக்கு சமூகமளிக்கவும்: விக்கிரமரத்ன

Administrator   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு அம்பாறை மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலின விக்கிரமரத்ன இன்று (14) தெரிவித்தார்.

கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் கடமைக்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான கடிதங்கள் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .