2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கல்முனையில் 5,500 அபின் பக்கெற்றுகள் கைப்பற்றப்பட்டன

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

கல்முனை பொதுச்சந்தையினுள் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து 5,500 அபின் பக்கெற்றுகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று பிற்பகல் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட அபின் 137,500 ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான குழுவினரே அபின் பக்கெற்களை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0

  • rafidh Sunday, 24 October 2010 04:12 PM

    மிகவும் நல்ல விடயம். பனி தொடரட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .