2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாழ்வின் எழுச்சி 6ஆம் கட்ட வேலைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள, வாழ்வின் எழுச்சி 6ஆம் கட்ட வேலைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி  நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது திவிநெகும மாவட்ட உத்தியோகத்தர் ஐ.அலியார் தெரிவித்தார்.
 
இத்திட்டத்தின் பிரதான நிகழ்வு, அம்பாறை, உகண பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரகொட திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி வளாகத்தில் திங்கட்கிழமை (20) காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
 
அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி.அல்வீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற தலைவர்கள்  மற்றும் திணைக்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இதேவேளை, மனைப்  பொருளாதாரம் மற்றும் போஷக்க்கை மேம்படுத்தும் இருபத்தைந்து இலட்சம் மனைப்பொருளாதார அலகுகளை வலுவூட்டும் தேசிய திட்டத்திற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள, 503 கிராம சேவகர்கள் பிரிவுகளில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
 
இந்நிகழ்வில் பயிர் விதைகள், மரக்கன்றுகள் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் பயன் தரும் மரங்களும் நடப்படவுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .