2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாழ்வின் எழுச்சி 6ஆம் கட்ட வேலைத்திட்டம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வாழ்வின் எழுச்சி 6ஆம் கட்ட வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.

குடும்பத்தின் பொருளாதாரம் மற்றும் போசாக்கை மேம்படுத்தும் இருபத்தைந்து இலட்சம் மனைப்பொருளாதார அலகுகளை வலுவூட்டும் தேசிய திட்டத்திற்கமைய மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவு தோறும் 503 கிராம சேவகர்கள் பிரிவுகளில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

திவி நெகும திணைக்களத்தினால் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் காய்கறி விதைகள், தென்னங்கன்றுகள், சிறு ஏற்றுமதி பயிர்கள் மற்றும் கால்நடைகள் என்பன தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள், சமயத்தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மர நடுகை வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .