Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தினால் மீனவர்களின் 6.3 மில்லியன் ரூபா பெறுமதியான மீன்பிடி கலங்கள் மற்றும் உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் கே.செல்வராசா தெரிவித்தார்.
இவ்வெள்ள அனர்த்ததினால் பாணமை தொடக்கம் நீலாவணை வரையிலான கரையோரப் பிரதேசசத்தில் உள்ள மீனவர்களின் உபகரணங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த பாதிப்புக்கள் தொடர்பான ஆவணங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் எதிர்வரும் சனிக்கழமை மாவட்ட கச்சேரியில் அமைச்சர் பசில் ரஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான கூட்டத்தில் பாதிப்பு தொடர்பான ஆவணங்கள சமர்ப்பிக்கபடும் எனவும் அவர் தெரிவித்தார்
இதேவேளை, வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈடுகளை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
9 hours ago
9 hours ago