2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அட்டாளைச்சேனையில் அக்குப் பஞ்சர் சிகிச்சை

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஜனவரி 10 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் முதன் முதலாக அக்குப் பஞ்சர் சிகிச்சை வைத்திய முறை, வைத்தியப் பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் நேற்று (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூட்டுவாதம், சீனி வியாதி, உடற்பருமன், ஒற்றைத்தலை வலி, கால் மற்றும் கை விறைப்புத் தன்மை, பாலியல் பலயீனம், மனச் சோர்வு, முடி உதிர்தல், முகப்பரு போன்ற நோய்களுக்கு, இச்சிகிச்சை வழங்கப்படுகின்றது.

இந்த அக்குப் பஞ்சர் சிகிச்சை வைத்தியம், மாதத்தின் இரண்டாம், நான்காம் வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9  மணி தொடக்கம் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.

இத்தினங்களில் 25 பேருக்கு மாத்திரமே சிகிச்சை வழங்கப்படுமெனவும், நோயாளருக்கான அனுமதியை, குறித்த தினங்களில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த சிகிச்சை முறையை, வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் கே.எம்.அஸ்லம் மற்றும் பர்வீன் முகிடீன், தொற்றாநோய்ப் பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி பஸ்மினா அறூஸ் ஆகியோர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .