2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் கடும் வரட்சி; குடிநீர் வழங்க நடவடிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,  குடிநீர் விநியோகிப்பதற்கு, பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், இன்று (09) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின், மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 1574 குடும்பங்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 1195 குடும்பங்களும், தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 690 குடும்பங்களும், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 306 குடும்பங்களும், உகண பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களுமாக மொத்தம் 3797 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு, பௌஸர் மூலம் பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .