2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவசர திருத்த வேலை; அம்பாறையில் ஒரு வாரத்துக்கு மின் தடை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மே 03 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரத் திருத்த வேலை காரணமாக, அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதென, இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

 

இதற்கமைவாக, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று நகரப் பகுதியில், நாளை 05) காலை 08.45 மணி முதல் மாலை 04.45 மணி வரையும், அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வலகம்புர பிரதேசத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.

அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று நகரப் பகுதியில், 6ஆம் திகதி காலை 08.45 மணி முதல் மாலை 04.45 மணி வரையும் மின் தடைப்படும்.

வீரகொட மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 03ஆம், 04ஆம், 05ஆம் கொலனிக் கிராமத்தில், 08ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலிருந்து அம்பாறை நகரப்பகுதி வரை, 09ஆம் திகதி காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

வீரகொட மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 20ஆம், 21ஆம் கொலனி பிரதேசங்களிலும் மற்றும் அம்பாறை வைத்தியசாலை பகுதியிலும் 10ஆம் திகதி காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

மேலும், 11ஆம், 12ஆம் திகதிகளில் 09ஆம் கொலனிக் கிராமம் மற்றும் வளத்தாப்பிட்டி, மல்வத்தை ஆகிய பிரதேசங்களிலும் அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கலபிட்டகலப் பகுதியிலும் மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .