2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆற்று மண் ஏற்றிய நால்வருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மார்ச் 13 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் அனுமதிப்பத்திரத்தை மீறி, சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரில் ஒருவருக்கு 15,000 ரூபாய் அபராதமும், இருவருக்கு  9,000 ரூபாய் அபராதமும், மற்றைய நபருக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய ஏ. பீட்டர் போல் உத்தரவிட்டார்.

குறித்த நபர்கள், அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X