2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Editorial   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளொன்று, இனந்தெரியாதோரால் இன்று (08)அதிகாலை 2 மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதென, கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.கே.சுல்பிகார் அலி என்பவரது மோட்டார் சைக்கிளே, அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்ட்டிருந்த போது, இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் நிலையத்தில், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், கல்முனைப் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X