2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஊழலுக்குத் துணைபோகாத தலைவர்களைத் தெரிவுசெய்யுங்கள்’

Editorial   / 2018 ஜனவரி 10 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

“மக்களோடு மக்களாகச் சேவை செய்யக்கூடிய சிறந்த ஆளுமையும் ஊழலுக்குத் துணைபோகாத தலைவர்களையும் தெரிவு செய்வது, அக்கரைப்பற்று மாநகரசபை மக்களுக்குரிய பொறுப்பாகும்” என மக்கள் விடுதலை முன்னணியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எம்.ஐ.அபூசஹீட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இம்முறை இடம்பெறவுள்ள வட்டாரமுறைத் தேர்தல், எமக்குப் புதிய அனுபவமாகும். வட்டாரத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் யார் சிறந்த வேட்பாளர் என்பதுடன், மக்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் நன்கு உணர்ந்து சேவை செய்யக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது.

“எமது சமூகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய போதெல்லாம் நாடாளுமன்றத்திலும் மற்றும் பேச வேண்டிய அனைத்து இடங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி பேசியது. அதற்கான தீர்வுகளை பெறுவதில் முன் நின்று உழைத்துவருகிறது.

“ஏனைய கட்சிகள் போலல்லாது, மக்கள் விடுதலை முன்னணி, மக்களுக்கான அர்ப்பணிக்கும் ஒரு கட்சியாகும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .