2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’ஒசுசல’ திறந்து வைக்கப்படும்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மே 01 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 'ஒசுசல' விற்பனை நிலையம், அக்கரைப்பற்றில் நாளை மறுதினம் (03) மாலை 04.30 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளதென சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசீம், இன்று (01) தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கலந்துகொண்டு, வைபவ ரீதியாக 'ஒசுசல' விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளாரெனவும் அவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் நீண்டநாள் தேவையை கருத்திற்கொண்டே இந்த ஒசுசல நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .