2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியக் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பயிலுநர் ஆசிரிய, மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன என, அட்டாளைச்சேனை தேசிய கல்வியக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ், இன்று (13) தெரிவித்தார்.

ஆரம்ப கற்கை நெறிக்கு 73 பயிலுநர் மாணவர்களும், விஞ்ஞான கற்கை நெறிக்கு 45 மாணவர்களும், கணித கற்கை நெறிக்கு 35 மாணவர்களும், இஸ்லாம் பாட நெறிக்கு 30 மாணவர்களும், விசேட கல்வி பிரிவுக்கு 15 மாணவர்களுமாக மொத்தம் 198 பயிலுநர் ஆசிரிய மாணவர்கள் இம்முறை அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர் தெரிவித்தார்.

புதிய மாணவர்களுக்கான பதிவு, கடந்த 05, 06, 07ஆம் திகதிகளில் இடம்பெற்றதாகவும், பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .