2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கைத்துப்பாக்கி மற்றும் கூரிய வாளுடன் இருவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

கல்முனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவரை, கைத்துப்பாக்கி மற்றும் கூரிய வாளுடன் பொலிஸார், இன்று மாலை கைதுசெய்துள்ளனர்.

கல்முனை 1 பிரதேசத்தைச் சேர்ந்த 62, 38 வயதுடைய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படி பிரதேசத்திலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய பொலிஸார், குறித்த இருவரையும் கைத்துப்பாக்கி மற்றும் கூரிய வாளுடன் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி இருவரையும் கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .